Site icon Thanjavur News

Union Minister Annapurna Devi said that Yoga Reveals the Ancient Culture of the Country

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது. பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவில் பின்னணியில் பெரும் திரளாக மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.இதில் நீதிபதிகள் சுந்தர்ராஜன், இந்திராணி, மணி, சிவசக்திவேல் கண்ணன், முருகன், தங்கமணி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

Exit mobile version