Site icon Thanjavur News

There will be a power cut on the 10th in the Mariamman Temple areas of Thanjavur.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் வருகிற 10-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version