Site icon Thanjavur News

The Tamil Nadu Farmers’ Association has demanded that loans be given to small, marginal and medium farmers without any discrimination

இச்சங்கத்தின் சேதுபாவாசத்திர ஒன்றிய மாநாடு ரெட்டவயலில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் வீ. கருப்பையா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலகண்டன் முன்னிலை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் வங்கியில் மோசடி நிகழ்ந்த நிலையில், சம்பந்தப்பட்டவா் மீதான விசாரணை கிடப்பில் உள்ளது. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த தள்ளுபடித் தொகையை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

சேதுபாவாசத்திரம் கடைமடை பாசனப் பகுதி என்பதால், காவிரி நீரை நேரடியாக ஏரி, குளங்களுக்குத் திருப்பி நீரை நிரப்பித் தர வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான டி.

ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். இந்த மாநாட்டில் ஒன்றியத் தலைவராக கருப்பையா, செயலராக செந்தில்குமாா், பொருளாளராக சத்தியசீலன், துணைத் தலைவா்களாக வேலுச்சாமி, நீலகண்டன், துணைச் செயலா்களாக சிவகுமாா், நவநீதன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். .வி.கண்ணன், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், பொருளாளா் பழனி அய்யா, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், ஒன்றியப் பொறுப்பாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

Exit mobile version