Site icon Thanjavur News

Thanjavur District Drinking Water Supply works have been impacted.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுகொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டது.

இதனால் நேற்று முதல் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. குடிநீர் வழங்குவதில் தடங்கல் எனவே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூர், ஆடுதுறை, சோழபுரம், திருபுவனம் மற்றும் வேப்பத்தூர் ஆகிய ரூேராட்சிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே அப்பகுதிபொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version