Site icon Thanjavur News

Thanjavur Corporation Commissioner Saravanakumar has announced the suspension of water supply today and tomorrow.

இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் தஞ்சாவூர் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்வதற்காக திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரக்கூடிய பிரதான குழாயில் வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே தஞ்சை மாநகரில் உள்ள 37-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version