Site icon Thanjavur News

Recruitment for the Home Guard Force in Thanjavur will be held on the 17th. Applications for this will be distributed on Friday.

தஞ்சையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஊர்க்காவல் படை தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 1 பெண் உள்பட 35 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இதில் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்த பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படுகிறது.

உடல் தகுதி தேர்வு ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியவற்றிற்கான நகல்களை இணைத்து வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் ஆவணங்களுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version