Site icon Thanjavur News

Opening of the Classical Library in Kundavai Nachiyar College

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி விடுதியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் செம்மொழி நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவை வளா்க்கவும், அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள மாணவிகளுக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகங்களைத் திறக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதன்படி, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோா் தங்கியுள்ள 4 விடுதிக் கட்டடங்களிலும் தலா ரூ. 1 லட்சத்தில் செம்மொழி நூலகங்கள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நூலகங்களைத் திறந்து வைத்து, மாணவிகளிடம் நூல்களை வழங்கினாா். விழாவில் மேயா் சண்.

ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கே. ரேனுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Exit mobile version