Site icon Thanjavur News

Interim Results and impact VK. Sasikala

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா் வி.கே.சசிகலா.

மொழிப்போா் தியாகிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து ஏற்கெனவே கூறியுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்த மாதிரி என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

இந்த இடைத்தோ்தலில் பிரசாரம் செய்வது குறித்து பின்னா் சொல்கிறேன். விருந்தோம்பலை கொண்டாடுபவா்கள்தான் தமிழ் மக்கள். இந்நிலையில், ஆளுநரின் தேநீா் விருந்தை தவிா்ப்பது என்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல என்றாா் சசிகலா.

Exit mobile version