Site icon Thanjavur News

Fear of the Indian team James Anderson: England team Announcement Against India

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குத் திரும்பியுள்ளார், இவரோடு சாம் பில்லிங்ஸும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக 3-0 ஒயிட் வாஷ் கொடுத்த இங்கிலாந்து, விராட் கோலி 2-1 என்று வென்று பாதியிலேயே வந்த இங்கிலாந்து அல்ல, இது வேறு இங்கிலாந்து என்பதை இந்த டெஸ்ட்டை ஆடும்போது உணர்வார். மேலும் அப்போது ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட்டிலிருந்து இந்திய அணி கோவிட்டைக் காரணம் காட்டி வந்தது.

இப்போது கோலி நிச்சயம் உணர்வார், அப்போதே ஆடியிருந்தால் 3-1 என்று பெரிய அளவில் வென்று இங்கிலாந்தில் கொடிநாட்டிய கேப்டனாகியிருக்கலாமே, நம் கேப்டன்சி காலமும் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்குமே என்று நிச்சயம் நினைப்பார்.

இப்போது இந்திய அணியின் மனநிலையும் வெற்றி மன நிலையில் இல்லை, தோற்றால் என்ன தொடர் 2-2 என்று ட்ரா ஆகும் அவ்வளவுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர், திராவிட் பேச்சும் அந்த ரகத்தில்தான் உள்ளது.

ரோஹித் சர்மா கோவிட் காரணமாக இந்த டெஸ்ட்டில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இன்னும் எந்தெந்த ‘டாப்’ வீரர்கள் என்னென்ன காரணத்தினால் கழன்று கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை.

Exit mobile version