Site icon Thanjavur News

Drinking water will be shut down in Thanjavur for 3 days starting today.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வாழ்வு பழுதடைந்துள்ளதால் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

எனவே தஞ்சை மாநகரில் உள்ள 6-வது வார்டு முதல் 28-வது வார்டு வரை இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை), நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version