Site icon Thanjavur News

Collector Dinesh Ponraj Oliver has said that there will be a local holiday for Thanjavur district on the 3rd.

தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

சதய விழா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது. 3-ந்தேதி பெருவுடையார், பெரியநாயகிஅம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா வருகிற 3-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version