Author: Karthick

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூச்சொரிதல் விழா அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு,…

Read More

தஞ்சாவூர் அலையாத்தி காடுகள், கடலின் முகத்துவாரங்களில் இருக்கும். ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள். கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அலையாத்தி காடுகள் என்பவை கடலோர உப்பு தன்மையை தாங்கும் திறன் கொண்ட தாவரங்களாகும். தஞ்சை மாவட்டத்தில் வெண்கண்டல், சுரபுன்னை, தில்லை, தீப்பரத்தை ஆகிய 4 வகை அலையாத்தி மர வகைகள் உள்ளன. இயற்கையாக ஆற்று கழிமுக துவாரங்களில் இவை வளர்ந்து உள்ளன. இவை கஜா புயல் வீசியபோது அங்குள்ள மக்களை பாதுகாத்துள்ளன. எனினும் அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி கஜா புயலின்போது சேதமடைந்தன. கடல் வளம் பாதுகாப்பு மேலும் அலையாத்தி காடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை இழுத்து பூமியில் சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தஞ்சை மாவட்டத்தில் மீன், நண்டு மற்றும் இறால் போன்றவை இயற்கையாக உற்பத்தியாகி,…

Read More

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவிகள் அவர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்துள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு சேர்க்கைக்கான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. கல்லூரியில் உள்ள 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 1,224 இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கீழ்கண்டவாறு நடைபெறும். மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள், 3 நகல்கள், சிறப்பு கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். வருகிற 5-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி) மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 6-ந் தேதி பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 8-ந் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. வரலாறு, பி.பி.ஏ., பி.எஸ்.சி. வேதியியல்,…

Read More

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் ரோசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2022-23 -ம் கல்வி ஆண்டில் இளநிலை (பி.லிட், பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்., பி.பி.ஏ.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான பாடப்பிரிவுகளும், அதற்கான தேதிகளும் கல்லூரி இணைய தளத்தில் (www.rsgc.ac.in) வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இத்தகவல் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு நேற்றுகாலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். விளக்கேற்றி வழிபாடு பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா,…

Read More

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டிற்கு 2 திட்டங்களுடன் கூடிய கொரோனா உதவி மற்றும் தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது. இதில் மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நலிந்த தொழில்முனைவோர்கள் மீண்டும் தொழில்களை நிறுவிட மற்றும் புதிய நிறுவனத்தை தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ரூ.5 கோடி 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், உரிமையாளர் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன்மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும். இந்த மானியத்திட்டம் சிறு, குறு…

Read More

தஞ்சையை அடுத்த களிமேடு அருகே உள்ளது பிருந்தாவனம் நகர். இந்த பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பாலப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து பாலத்துக்கு அருகே உள்ள பிருந்தாவனம் நகர் பகுதிக்கு செல்லும் குடிநீர் தடைபட்டது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கு குடிநீர் செல்லவில்லை. மேலும் பாலப்பணிகளும்விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் குடிநீர் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குடிநீர் வரவில்லை. திடீர் மறியல் இதையடுத்து அந்த பகுதி மக்கள் சிறிது தூரம் சென்று தஞ்சை மாநகராட்சி எல்லையிலும், அருகே உள்ள ஊராட்சி பகுதிக்கும் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டும் எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு பிருந்தாவனம் நகர் பகுதிக்கு…

Read More

SK Webventure is an independent company of multi-disciplinary experts with a vision to empower clients with enriching and inspiring solutions. We have helped clients conquer the digital frontier in an ever-changing online landscape and offer exceptional service tailored to your brand and needs. With rich capabilities in design, development, SEO, content writing, printing and advertising, we are proud to be a leading web design agency in Thanjavur and Tirchy offering holistic and enduring solutions. Services List Logo Design and RedesignWeb Design and Development ServicesSEO ServicesSEM ServicesEcommerce Website DevelopmentPayment Gateway DevelopmentDigital Marketing ServicesContent Writing Services and more servicesDomain and Web Hosting…

Read More

‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் ‘விருமான்’ படத்தில் நடித்தார் நடிகர் கார்த்தி. இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.கே. செல்வகுமார். இந்த படத்தின் “கஞ்சா பூவு கண்ணால” பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு இன்று (03 ஆகஸ்ட் 2022) நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவும் கலந்து கொள்கிறார் . விழா “மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்” நடைபெறும். அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விருமன், தென் தமிழ்நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக தேனியில் நடக்கும் கிராமிய நாடகமாகும். இந்தப் படம் குடும்பம்…

Read More

தென் ஆப்பிரிக்கா அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. சவுத்தாம்ப்டன், தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 192…

Read More