Author: Karthick

தஞ்சாவூர் மழை காரணமாக அழுகியதால் விளைச்சல் குறைந்துள்ளதால் தஞ்சையில் ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் வேதனை அடைந்தனர். கொத்தமல்லித்தழை கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், சீரண சக்தியை எளிதாகவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கொத்தமல்லியில் இலை முதல் தண்டுவரை அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. சாம்பார், ரசம் போன்ற தமிழர்களின் சமையல்களில் இதன் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லித்தழை நன்கு பசியை தூண்டுவதால் மக்களும் இதனை உணவுகளில் சேர்க்கின்றனர்.தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. இதே போல் இந்த பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சைக்கு மட்டும் 2 சரக்கு ஆட்டோக்களில் மல்லித்தழை கட்டுகள் வரும்.

Read More

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உத்தமதானி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வன் உத்தரவின்பேரில், உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதேபோல, கும்பகோணம் அருகே உள்ள கொற்கை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் பகவான்தாஸ் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினையுறா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சுதாரோஸ் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் ஜெகதீஷ், மணியன், சங்கரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமாமிர்தம் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.…

Read More

மாநகராட்சி இலவச நிறுத்தமாக அறிவித்ததனால் இவர்கள் அவர்களின் சொந்த இடமாக மாற்றிகொண்டார்களா? கார் வாங்க முடிந்தவர்களால் வாகன நிறுத்த வாடகை கொடுக்க முடியாதா? நண்பர்களுக்கு வணக்கம் தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சி இலவச வாகன நிறுத்துமிடம் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது போன மாசம் வரைக்கும் வெறுமனே காட்சியளித்த நமது தஞ்சாவூர் மாநகராட்சியின் வாகன வாகன நிறுத்தம் தற்பொழுது நீங்கள் பாருங்கள் சில வாகனங்கள் இருக்கிறது அதுவும் கவர் போட்டு முடி பத்திரமாக இதனால் யாருக்கு என்ன லாபம் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கட்டணம்வசூல் செய்து வாகன நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் இலவசம் என்றதும் நிறைய வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது இதனால் மாநகராட்சிக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லை ஒரு காவலாளியை போட்டு வாகனத்தை நிறுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்

Read More

ராணிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். லண்டன், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர். இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானத்தில் நேற்று இரட்டை வானவில் தோன்றியுள்ளது. இதனை ராணிக்கு அஞ்சலி செலுத்த வெளியில் கூடியிருந்த பொதுமக்கள்…

Read More

இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆசிய கோப்பை 2022, சிறப்பம்சங்கள்: விராட் கோலி நவம்பர் 2019 க்குப் பிறகு தனது முதல் சதத்தை அடித்தார், வியாழன் அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோஹ்லி வெறும் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் கேப்டன் கேஎல் ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார், இந்தியா துடுப்பாட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, இலக்கை எளிதில் பாதுகாத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரன் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் (5/4) பந்தில் மிளிர்ந்தார்.

Read More

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. சிறப்பு முகாம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடக்கிறது. 11 வகையான ஆவணங்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச்செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை…

Read More

தஞ்சாவூர் ும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை மீட்டுக்கொண்டுவர சிலைகடத்தல் தடுப்பு பிரிவு பேலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிலை திருட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சுந்தரபெருமாள் கோவில். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் ராஜா, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஒரு புகார் அளித்தார். அதில், சவுந்தராஜபெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டு அதற்கு பதிலாக போலியாக ஒரு சிலையை வாங்கி வைத்துள்ளனர். 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் அந்த சிலை திருடிப்பட்டிருக்கலாம். எனவே கோவிலில் திருடப்பட்ட பழங்கால உலோக சிலையை விசாரணை செய்து மீட்டு…

Read More

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பகுதியில் அதிக பட்சமாக 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. பரவலாக மழை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்யவில்லை. வெயில் காணப்பட்டது. பின்னர் மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக குடிசை வீடு இடிந்து சேதம் ஆனது. தஞ்சையில் அதிகம் தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த…

Read More

10 ஆம் நூற்றாண்டில் தென் துணைக் கண்டத்தில் சோழ வம்சம் ஒரு சக்திவாய்ந்த பேரரசாக மாற வழிவகுத்த நிகழ்வுகளின் பெரும் மறுபரிசீலனைக்கு இந்த காட்சி உறுதியளிக்கிறது. இன்று சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் டிரைலருக்கு குரல் கொடுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையைப் பற்றிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு, பொன்னியின் செல்வன்: முதல் பாகம் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் குமரவேல் எழுதிய திரைக்கதை. PS1 இரண்டு பகுதி திரைப்படத் தொடரின் முதல் படமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=D4qAQYlgZQs நடிகர்களில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், குந்தவையாக திரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி என பல ஏ-லிஸ்டர்கள் உள்ளனர். அஸ்வின் காக்குமானு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத் குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ரஹ்மான்,…

Read More

இந்தியா மற்றும் இலங்கை ஆசியக் கோப்பை 2022 சிறப்பம்சங்கள்: செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 57 ரன்களும், அவரது தொடக்க பங்குதாரர் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் தசுன் ஷனக ஆகியோர் முறையே 52 மற்றும் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக, பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 41 பந்துகளில் 72 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்க (3/24), சாமிக்க…

Read More