Author: Karthick

ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான்.…

Read More

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். https://www.youtube.com/watch?v=N-pvp7GSD3Y லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் இன்று (நவம்பர் 14-ந் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. சர்தார் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். சர்தார் படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று திரைக்கதை அமைக்க உள்ளனர். இதுவரை கார்த்தி 24 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்து 25-வது படமாக ஜோக்கர் படம் மூலம் தேசிய விருது பெற்ற ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார். ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் வித்தியாசமான புதிய தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Read More

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். https://www.youtube.com/watch?v=zuVV9Y55gvc இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த நிலையில், வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே… ரஞ்சிதமே எனத் தொடங்கும் முழு பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் . இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது

Read More

Digital marketing is consistent with its performance in drawing the attention of viewers. The vast use of the internet among users causes this advantage. The possibility of reaching maximum users is easier these days. So, using digital marketing as a primary asset to improvise your business growth is quite common. As a businessman, your idea to establish a strong impression among many users brings ultimate results for sure. In that case, SK WebVenture Best Website Design Company in Thanjavur assists you well. With our support, you will raise your online dominion easily and precisely. No fake promises here! We deliver…

Read More

1. KP Webtech KP Webtech is an independent company of multi-disciplinary experts with a vision to empower clients with enriching and inspiring solutions. We have helped clients conquer the digital frontier in an ever-changing online landscape and offer exceptional service tailored to your brand and needs. With rich capabilities in design, development, SEO, content writing and mobile app development , we are proud to be a leading web design company in Chennai offering holistic and enduring solutions. Company Size: 0 – 20 Founded In: 2017 Services Offered by the Company: Web Designing & Development, E-commerce Web Development, Search Engine Optimization, Digital Marketing, Branding, Google Adwords, Domain…

Read More

அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் கோதாவில் குதிக்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது. கோலி-சூர்யா கூட்டணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை துவம்சம் செய்யும் சூர்யகுமார் யாதவின் பிரமாதமான ஷாட்டுகள் பரவசமூட்டுகின்றன. இதே போல் திரில்லிங்கான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 82…

Read More

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). இந்த நிலையில் தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 9, 2022 நிலவரப்படி) சூர்யகுமார் யாதவ் – 869 புள்ளிகள் முகமது ரிஸ்வான் – 830 புள்ளிகள் டெவோன் கான்வே -…

Read More

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக அடிலெய்டு மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து இந்திய அணிக்கு திரும்பிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அணியின் விக்கெட் கீப்பராக முதல் 4 லீக் போட்டிகளில் செயல்பட்டார். கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் முதல் 4 போட்டிகளில் களமிறங்காத ரிஷப் பண்ட்-க்கு , ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில்…

Read More

தஞ்சாவூர்; தேங்கி நிற்கும் கழிவுநீரால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை எப்போது மாறும் எனவும், புதிய மார்க்கெட் எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்காலிக காமராஜர் மார்க்கெட் தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் இருந்தன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காமராஜர் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக மார்க்கெட்…

Read More