Author: Karthick

தஞ்சையில், பூட்டிய வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பகலில் குப்பை பொறுக்குவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவரை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் மடக்கினர். பூட்டிய வீட்டில் திருட்டு தஞ்சை வங்கி ஊழியர் காலனியில் கடந்த 9-ந் தேதி பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டது. இதில் ஒரு வீட்டில் மட்டும் 19½ பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. மற்ற 2 வீடுகளில் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், போலீஸ்காரர்கள் புவனேஷ், சிவக்குமார், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் அந்த பதிவுகளை கொண்டு தீவிரமாக தேடினர். இதில் அந்த வாலிபர் சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சின்ன சிவா என்ற…

Read More

சென்னை, விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது இந்த நிலையில்’ டிஎஸ்பி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Read More

தென் இந்தியாவில் வெற்றிப்படங்களின் கதாநாயகியாக பெயர் பெற்றவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் நடித்த முதல் படம் ‘டோலி சஜா கே ரக்கீனா’ 1997-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ஜோதிகா 2001-ல் ‘லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை, தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். துஷார் இத்ராணி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.

Read More

இந்தியா vs நியூசிலாந்து டி20 சிறப்பம்சங்கள்: ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மவுங்கானுயில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ததால் சூர்யகுமார் யாதவ் தனது பணக்கார வடிவத்தைத் தொடர்ந்தார். T20I தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 191/6 என்ற மாபெரும் வெற்றியைப் பெற்றது. பதிலுக்கு, நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19வது ஓவரில் தீபக் ஹூடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் 2.5 ஓவர்களில் 4/10 என்ற விதிவிலக்கான எண்ணிக்கையுடன் திரும்பினார். அதேசமயம், டி20யில் சூர்யகுமாரின் இரண்டாவது சதம் இதுவாகும். மைல்கல்லை முடிக்க அவர் 49 பந்துகளை எடுத்தார், இதில் பதினொரு 4கள் மற்றும் ஏழு 6கள் இடம்பெற்றன. டிம் சவுத்தியும் முந்தைய நாள் தனது ஹாட்ரிக்கை முடித்தார். வேகப்பந்து வீச்சாளர்…

Read More

வெலிங்டன், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர். இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். உலக கோப்பையில்…

Read More

சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்! சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது. சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம். சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன இந்த…

Read More

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.* கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு…

Read More

அசிதாங்க பைரவர் ருரு பைரவர் சண்ட பைரவர் குரோத பைரவர் உன்மத்த பைரவர் கபால பைரவர் பீஷண பைரவர் சம்ஹார பைரவர் மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம். எட்டு பைரவர்களின் வாகனங்கள்: அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் ருரு பைரவர் – காளை வாகனம் சண்ட பைரவர் – மயில் வாகனம் குரோத பைரவர் – கருட வாகனம் உன்மத்தபைரவர் – குதிரை வாகனம் கபால பைரவர் – யானை வாகனம் பீஷண பைரவர் – சிம்ம வாகனம் சம்ஹார பைரவர் – நாய் வாகனம் மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.…

Read More

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த ஆயிரத்து எட்டு லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது. இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல்: 1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அஹிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28…

Read More

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து ‘கடவுளைப் போல உதவினீர்கள்… என் வரையில் நீங்களே கடவுள்’ என்று சொல்வோம், அல்லவா…!அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே…

Read More