Site icon Thanjavur News

3 Days of Drinking Water Supply Stoppage in Thanjavur

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version