Site icon Thanjavur News

வாகனத்தில் அதிவேகமாக தவறான திசையில் வந்து மோதிய இளைஞர்

தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே சாலையில் மெதுவாக சாலை விதிகளின் படி முறையாக தனது 2 மகள்களுடன் ஓட்டி வந்த நபரின் வாகனத்தில் அதிவேகமாக தவறான திசையில் வந்து மோதிய இளைஞர்….

மேலும் தனது வாகனத்தின் கண்ணாடி உடைந்து விட்டது என்று அந்த இளைஞர் , சரியாக போக்குவரத்து விதி படி முறையாக வந்த நபரை தனது இரு சிறிய மகளுடன் விழுந்த அந்த நபரை தாக்கினார்… பாவம் இந்த இரண்டு இரு பிள்ளைகள் கீழே விழுந்து அடிபட்டதுடன் தனது அப்பாவை அடிப்பதை பார்த்து கதறி கொண்டு இருந்தார்கள் … நல்ல வேளையாக சுற்றி இருப்பவர்கள் அந்த திமிர் பிடித்த நபரை தள்ளி கொண்டு சென்றனர் … தவறும் செய்து விட்டு பெண்பிள்ளைகள் உடன் வேதனையில் இருந்த நபரை தாக்கும் மன நோயாளிகளை என்ன செய்வது 😭

மாவட்ட நிர்வாகத்திற்கும் , காவல் துறைக்கு வேண்டுகோள் தஞ்சையில் போக்குவரத்து காவல் என்று ஒன்று இருப்பது போலவே தெரியவில்லை தயவு செய்து போக்குவரத்து சமிகைகள் அமைத்து போக்கு வரத்து காவலர்கள் அமைத்து தஞ்சை மாநகர் முழுவதும் போக்குவரத்தை முறை படுத்த வேண்டுகிறோம் …. இது போன்று சாலையில் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்தும் மனநோயாளிகள் கடுமையா தண்டிக்கவும் வேண்டுகிறோம்

Exit mobile version